# ஐந்து முதலைகளின் கதை (நாவல்)
# சரவணன் சந்திரன்
# ரூ.150/-
தொழில் தேடி திரவியம் தேடி நட்பைத் தேடி தைமூர் சென்றுதோல்வியுடன் திரும்பிய இளைஞனின் கதைதான் ஐந்துமுதலைகளின் கதை. நமக்குத் தெரியாத தைமூரின் தட்பவெப்பநிலையில் தொடங்கி, நாய்க்கறி, காதல், காமம், அட்டை,வெள்ளரிக்காய் என ஒரு டாக்குமெண்டரியைப் போல அத்தனைவிவரங்கள். கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார் சரவணன்.
வாசிப்பதற்கு எளிமையாக இயல்பான மொழியில் நாவல் பரபரவெனபோகிறது. புதிய பிரதேசம், அறிமுகம் இல்லாத கடல் அட்டைத்தொழில், அன்பும் பகையும் நிறைந்த நட்பு வட்டம், சூழ்ச்சி எனநாவலின் கதைப்போக்கில் சரவணன் விளையாடுகிறார்.
தொழில் என்பது வெற்றி மட்டுமல்ல என்பது புரிகிறது.முயற்சிகளுக்குத் தோல்வி இல்லை. பத்திரிகையாளராக இருக்கும்அனுபவம் சரவண னுக்கு நிறையவே கைகொடுத்திருக்கிறது.
ஒரு நாவல் என்பது பெருநிலப்பரப்பாக பரந்து விரிந்த மானுடவாழ்வின் முழுமையாக, பல எல்லைகளை தொடவேண்டும்என்பார்கள். அப்படி தொட்டுப் பார்க்கும் முதல் முயற்சியில்வென்றிருக்கிறார் சரவணன்.